நீரில் நனைந்தும் நனையாத அக்கினியை

வேரினில் கொண்டானே வித்தகன்-நாரிலே

கல்லுரிக் கும்சிவனை காணுமண் ணாமலையில்

உள்ளுரித்துக் கண்டான் உவந்து.

ஆனை புகுந்தவுடல் ஆக உடலசைய

ஞான முனிவன் நடைபயின்றான் -தேனை

அருந்திச் செரித்த அறுகாலாய் ஜென்ம

மருந்தாய் அமர்ந்தான் மலர்ந்து.

உள்ளம் தனைக்கொன்றே ஊனில் புதைத்தவனோ

தள்ளிநின்று தன்னை தரிசித்தான் -பள்ளம்

புகமண்டும் கங்கைப் புனலாய் சிவனும்

அகம்வந்து சேர்ந்தான் அறி.

பாதாள லிங்கம் புடம்போட்ட தங்கம்தான்
ஆதாரம் தன்னை அறிந்தது-சேதாரம்
மேனி தனில்நேர, மேன்மைதவம் செய்கூலி

ஞானமென ஏற்கும் நயந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *