currency-notes_647_110816100549கறுப்புப் பணம் பதுக்கலுக்கும், கள்ளப் பணம் புழக்கத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கை, தற்காலிக சிரமத்தையும் நீண்ட கால நன்மையையும் தரவல்லது!

இத்தகைகைய தொடர் நடவடிக்கைகள் விலைவாசியையும் பெருமளவு குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் “பணம்” என்றால் என்ன என்பதை இந்தியர்கள் அனுபவ ரீதியாய் உணர்ந்து கொண்டார்கள்.

1. எதிர்பாராத சூழலில் கையில் பணமில்லையே ஓரிரு நாட்கள் சமாளிக்க முடியும்.
2. உண்மையில், அன்றாட செலவுக்கான பணத்தேவை மிகவும் குறைவு.
3. பணம் என்பது உருவமுள்ளதல்ல.. அருவமானது.

பழைய பாடல் ஒன்றுண்டு.

“ஓரிடந்தனிலே நில்லாது உலகினிலே
உருண்டடோடிடும் பணம் காசெனும்
உருவமான பொருளே”

ஆனால் பணத்திற்கு உருவமில்லை. இன்றைய பொருளாதார சூழலில், வங்கியின் பண அட்டைகளும், கடன் அட்டைகளுமே பல்வேறு வணிக நடவடிக்கைகளை இயக்கவல்லது.

ஒரு நிறுவனம், தன் பணியாளர்களின் சம்பளத்தை நேராக அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்துகிறது.

அவர் வீட்டு வாடகை & வீட்டுக்கான பொருட்கள் வாங்கிய தவணைக் கட்டணம் & அலைபேசிக் கட்டணம் ஆகியவற்றை வங்கிக்கு நேரடியாக மாற்றம் செய்துவிடுகிறார்.

வீட்டுக்கு வேண்டிய மளிகைகள், குடும்பத்தின் பயணம், உணவகம், பிள்ளைகள் கல்விக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் அவரால் அட்டையை பயன்படுத்த முடிகிறது.

எனவே உங்கள் பணத்தைப் பாராமலேயே பணத்தைக் கையாள்வதற்கான வாய்ப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது உங்களை நீங்களே இன்னொரு கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். யாராவது பணத்தைப் பார்த்ததுண்டா?

உங்கள் பையிலுள்ள, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டைப் பாருங்கள் அதில் என்ன எழுதியிருக்கிறது?

“இதை வைத்திருப்பவருக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் தர சம்மதிக்கிறேன்” என எழுது ரிசர்வ் வங்கி கவர்னர் கையெப்பமிட்டுள்ளார்.

அதாவது இது இரண்டாயிரம் ரூபாயல்ல.. இரண்டாயிரம் ரூபாய்க்கான உறுதிப் பத்திரம்!!

இதை எடுத்துக் கொண்டு போய் ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் தந்து, “எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டால் அவர் எதைத் தருவார்?

பணம் ஒருவகை அருவம். ஒருவகை நம்பிக்கை. ஒருவகை மாயை. ஒருவகையில் பேருண்மை. பணத்தின் மதிப்பு மாறுவது. மதிப்போடு வாழ்வதே மாறாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *