குங்குமத்தில் குளித்தெழுந்த கோலமடி கோலம்

பங்கயமாய் பூத்தமுகம் பார்த்திருந்தால் போதும்

அங்குமிங்கும் அலைபாய்ந்து அழுதநிலை மாறும்

தங்குதடை இல்லாமல் தேடியவை சேரும்

கைகளொரு பத்தினிலும் காத்தணைக்க வருவாள்

நெய்விளக்கின் நடுவினிலே நித்திலமாய் சுடர்வாள்

வெய்யில்மழை சேர்த்ததுபோல் வெப்பமாகிக் குளிர்வாள்

பைரவியாள் தேரிலேறி பவனிவந்து மகிழ்வாள்

ஆயகலை யாவுமவள் வாயிலிலே கூடும்
தாயவளின் பார்வையிலே நின்றுவிளையாடும்
ஓயும்வினை ஓடவரும் ஓங்கார ரூபம்
வேய்குழலில் வீணையினில் வித்தகியின் நாதம்

பக்தரெல்லாம் பரவசத்தில் பாடியாடி சிலிர்க்க
முக்தரெல்லாம் மூன்றுவிழி மோகனத்தில் லயிக்க
சித்தெரெல்லாம் லிங்கரூப சக்திகண்டு களிக்க

வித்தையெல்லாம் செய்பவளை என்னசொல்லி விளக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *