அருவிகள் நடந்த வழித்டமிருக்கும்
மலையின் மீது தழும்புகள் போல.
கரும்பாறைகளின் கசிவின் தடயங்கள்
இராணுவ வீரனின் கண்ணீர்போல.
மெல்லிய கீற்றாய்ப் பறவையின் பாடல்
நேற்றைய கனவின் நிழலைப் போல.
மௌனப் பூக்கள் மலர்கிற உச்சியில்
கனல்கிற அமைதி கடவுளைப் போல.
வெளிப்படாத சௌந்தர்யம் இன்னும்
கருவிலிருக்கும் குழந்தையைப் போல.
துளையிடப்படாத புல்லாங்குழலில்
தூங்குகின்ற இசையைப் போல.
இத்தனை அழகிலும் இழையுதென் இதயம்
மலைமேல் பெய்கிற மழையைப் போல.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *