Blog

/Blog

நீங்கள் நினைப்பது என்ன?

கால்கள் பதித்தோம் வாழ்வின் தடத்தில் தடைகள் வரலாம் ஒருசில இடத்தில் தாண்டி நடக்கப் போகின்றோமா தயங்கி நிற்கப் போகின்றோமா…. நீங்கள் நினைப்பது என்ன? பத்திரமானது சராசரி வாழ்க்கை பரவசமானது சாகச வாழ்க்கை பொத்தி வைத்தே போய்விடலாமா புதையல் எடுத்து ஜெயித்திடலாமா….. நீங்கள் நினைப்பது என்ன? சலனம் சபலம் சுகமாய் தோன்றும் செயல்கள் கடமைகள் சுமையாய் தோன்றும் சிலநொடி சுகத்தில் சாய்ந்திடலாமா செயல்கள் வழியே வாழ்ந்திடலாமா…. நீங்கள் நினைப்பது என்ன? மகிழ்ச்சியை நோக்கியே மண்ணில் சிலபேர் மலர்ச்சியை நோக்கியே ...

சாகித்ய அகாதமி-ஆளுக்கா?நூலுக்கா?

ஆ.மாதவன் தமிழில் முக்கியமான படைப்பாளி. அவருக்கு தரப்பட்டுள்ள சாகித்ய அகாதெமி விருது காலந்தாழ்ந்து தரப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரம், அவருக்கு தரப்பட்டுள்ள விருது, அவருடைய விமர்சன நூல் ஒன்றுக்காக என்பதுதான் விநோதம். அந்த ஆண்டின் சாகித்ய அகாதெமி விருதுக்கென வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் வெளியான நூல்கள்தாம் பரிசீலிக்கப்படும் என்ற முறையில் ஆ.மாதவனின் இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,அடிப்படையில் ஆ.மாதவன்,புனைவு எழுத்தாளர். அவருக்கு விருது தாமதமாகிக் கொண்டே போவதை குழுவில் ஒருவர் வலியுறுத்த அவரது விமர்சனக் கட்டுரைகள் ...

மூடர் கூடம்

ஓராசிரியர் பள்ளியிலே ஓட்டமில்லே ஆட்டமில்லே யாராயிருந்தாலும் எப்போதும் அச்சத்திலே! சார்வாளின் இருமலிலும் சங்கீதக் கார்வையின்னு வாய்பாடு படிப்பதன்றி வேலையங்கே ஏதுமில்லே வச்சதுதான் சட்டமவர் வகுத்ததுதான் பாடமுன்னு உச்சியிலே கிறுக்கேறி ஊர்பகைக்கக் கெடந்தாலும் லச்சையெதும் இல்லாத லட்சணத்த என்னசொல்ல: கச்சைகட்டி மோதுகிற கிருத்துருவம் கொஞ்சமல்ல பெட்டிக்கடை வாசலிலும் ரொட்டிக்கடை வாசலிலும் வட்டிக்கடை வாசலிலும் வர்றவங்க போறவங்க தட்டுக்கெட்ட பிள்ளைகளைத் தன்போக்கில் ஆட்டுவிக்கும் கெட்டிக்கார வாத்தியார குத்திக்குத்திப் பேசுறாக கால்வாசி தமிழ்படிச்சு குப்பைகளை அள்ளிவச்சு மேல்மாடி நெரப்புறதே மேதாவித் தனமுன்னு ...

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஓர் அறிமுகம்-3

தமிழ்ச் சமுதாயத்தின் தொல்மரபுகளையெல்லாம் மீட்டெடுத்த களஞ்சியம் தைப்பாவை. கண்ணனைச் சொல்லும் போது “கதிர்மதியம் போல் முகத்தான்” என்றாள் ஆண்டாள். இதனை உளவாங்கிய கவிஞரோ ” எங்கள் சமுதாயம் ஏழாயிரம் ஆண்டு திங்கள் போல் வாழ்ந்து செங்கதிர்போல் ஒளிவீசும்” என்றெழுதுகிறார். சங்க இலக்கியத்தில் போர்நிமித்தமாய் தலைவன் பிரிந்து செல்ல, தலைவி துயருற்றிருப்பது குறித்து நிறைய பாடல்கள் உண்டு.அந்த சாயலில் தைப்பாவையில் ஒரு பாடல்.வாளேந்தும் வீரன் பெண்ணைத் தொடும்நேரம் பார்த்து போர்முகம் வரச்சொல்லி ஓலை வருகிறது.இவள்தனிமையில் துயர்ப்படுகிறாள். “வாளைத் தொடு ...

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஒர் அறிமுகம்-2

கவியரசர் அனாயசமான ஓசையழகுடன் எழுதியுள்ள தைப்பாவையில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். தைமாதம் முதல்நாளில் உழவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே எழும் ஓசைகள் வழியே உணர்த்துகிறார் கவிஞர். காளை மணியோசை களத்துமணி நெல்லோசை வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய் வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய் (மேழியர்-உழவர்) ...

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஒர் அறிமுகம்-1

கவியரசு கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு,சமய நூல்களில் லயிப்பு ஆகியன அவரிடம் திருப்பாவை,திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது. அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும் அவர் மனதில் இடம் பிடித்ததன் விளைவாக எழுந்த நூல் தைப்பாவை. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பாவை வடிவமொன்றைச் செய்து அதனை முன்னிலைப்படுத்தி பாவாய் என அழைத்து தோழியர் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால் தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே தைப்பாவாய் என அழைத்துப் பாடியிருப்பார். ...
More...More...More...More...