Blog

/Blog

மார்கழி13- வினை நீக்கும் வழிபாடு

எந்தவொன்றை மிகுதியாக சிந்திக்கின்றோமோ அதுவே எங்கும் புலப்படுவது இயல்பு. இறைசிந்தையிலேயே இதயம் தோய்ந்த இப்பெண்கள்,நீராடப் போய்ச்சேர்ந்த பொய்கையிலும் அம்மையப்பனையே காண்கிறார்கள். குவளை மலரின் கருமை நிறம்,அம்மையை நினைவூட்டுகிறது. செந்தாமரை சிவப்பரம்பொருளை குறிக்கிறது.வினை நீக்கும் உடல் குறுகி பணிவு காட்டும் அடியார்கள் மந்திரங்கள் உச்சரித்த வண்ணம் வலம் வருவது போல்,வண்டுகள் பொய்கையை சூழ்கின்றன. சிவசக்தியின் பெருங்கருணையே பொய்கையாய் பெருகி நிற்க, அந்தக் கருணையின் பெருக்கில் திளைத்தாடி,அணிகலன்கள் தாண்டி, உடலையும் தாண்டி உள்நிலையில் ஊடுருவும் திருவருளில் திளைப்போம் என்பது இப்பாடலின் ...

மார்கழி 12- பொய்கையா? சுனையா?

முந்தைய பாடலின் நீட்சியாகவும் சிவானந்தம் என்னும் அற்புதத்தில் ஆழ்ந்து திளைக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும் இப்பாடல் அமைகிறது.சிவமாகிய தீர்த்தத்தில் நீந்திக் களித்து விளையாடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை. தானே தீர்த்தனாய் வினைகளை தீர்ப்பவனாய் விளங்கும் இறைவன் சிற்றம்பலத்தில் அனலேந்தி ஆடுகிற கூத்தனாய் திகழ்கிறான். பிரபஞ்சம் முழுவதையும் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்கிறான். அவன் புகழ்பாடும் வார்த்தைகள் பாடி கைவளை குலுங்க ஆடை அணிகள் ஆர்த்து ஒலியெழுப்ப,கூந்தலின் மேலே வண்டுகள் ஆர்க்க,பூக்கள் கொண்டபொய்கையில் குடைந்தாடி,உடையவனாம் சிவனுடைய திருவடிகளைப் ...

மார்கழி 11- சிவப்பொய்கை! தவக்குளியல்!

சிவத்தின் பெருங்கருணையே ஒரு பொய்கையாய் பெருகி நிற்கிறது.அதுவும் வண்டுகள் மொய்க்கும் பொய்கை. அதாவது பொய்கையை வண்டுகள் மொய்க்கக் காரணம் அதில் பூத்திருக்கும் தாமரைகள். சிவப்பொய்கையில் குதிக்கும் இந்த மனித வண்டுகள் அவனுடைய திருவ்டித் தாமரைகளைத் தேடி கைகளால் குடைகின்றன. வழிவழியாய் சிவனை வழிபடும் தவம் செய்த இவ்வுயிர்கள் ,தழல்போல் சிவந்து திருநீறு பூசிய சிவனை, சிற்றிடையும் தடங்கண்களும் கொண்ட உமையம்மையின் மணவாளனை உருகிப் பாடி உபாசிக்கிறார்கள். இறையருளுக்குப் பாத்திரமானவர்கள் வாழ்க்கை அற்புதங்களும் அதிசயங்களும் நிரம்பிய வாழ்க்கை.அவற்றுக்கு நீங்கள் ...

மார்கழி 10- “எல்லையின்மை எனும் பொருள் அதனை”

பன்முகப் பண்புகள் என்னும் ஈடிலாத தன்மையின் பிரம்மாண்டமாகவும் எல்லைகளைக் கடந்த வியாபகமாகவும் சிவன் விளங்குவதை சிந்தித்து வியக்கும் விதமாய் திருவெம்பாவையின் பத்தாம் பாடல் அமைந்துள்ளது. எல்லோருக்கும் எல்லாமாக நிற்கும் சிவனை எவ்வாறு வரையறுப்பது என்னும் இன்பத் தவிப்பே இப்பாடலின் உயிர்நாடி.சொல்லால் எட்டப்படாத தொலைவில் பாதாளங்களுக்கும் அப்பால்,அவன் பாதமலர்கள் உள்ளன. அவன் திருமுடியும் தேடிக் கண்டடையும் இடத்திலில்லை. அவன் திருமேனியின் ஒரு பாகம் பெண்பாகம் என்னும் வரையறையும் அவனை உணர்ந்ததாய் ஆகாது. ஏனெனில் அவன் ஒரே திருமேனி கொண்டவனல்லன். ...

மார்கழி-9-துணையாய் திகழ்பவன் சிவனே! துணையைத் தருபவன் அவனே!

எது பழையது எது புதியது என்கிற கேள்வியை உன்னிப்பாகப் பார்த்தால் ஒன்று நமக்குத் தோன்றும்.காலம் எத்தனை பழையது! ஆனால் எப்போதும் புதியது. காலமே அப்படியென்றால், காலகாலன். இன்னும் பழையவன்.என்றும் புதியவன். பலரிடம், “எது உங்கள் இஷ்ட தெய்வம் “என்று கேட்கிறார்கள். அதை விட வேடிக்கை,அதற்கு அவர்கள் பதிலும் சொல்கிறார்கள். இறைவனை உபாக்சிக்கக் கூட அவனுடைய அருள் வேண்டும் என்பதை உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் என்னும் வரி உணர்த்துகிறது. இந்த மண்ணில் மனிதப்பிறவி எடுப்பதன் முக்கிய நோக்கமே ...

மார்கழி 8-ஒலியும் ஒளியும்

திருவெம்பாவையில் சூட்சுமத் தன்மை மிக்க பாடல்களில் இதுவும் ஒன்று.பறவைகள் சிலம்பும் சங்கம் இயம்பும் என்கிற நயங்களைத் தாண்டி வருகையில் பறவைகள் சிலம்பும் ஒலியும் சங்கம் இயம்பும் ஒலியும் கடந்துபரஞ்சோதியின் ஒளி எழுகிறது. ஒளிக்கும் ஒலிக்குமான சூட்சுமத் தொடர்பும் அதன் விளைவாய் எழும் கருணையுமாய் பாடல் துலக்கம் கொள்கிறது. மந்திர செபத்தால் உள்ளே எழும் சிவசோதியானது பெருங்கருணை பாலிக்க அந்தக் கருணையே நிலையான செல்வமாய் அமைகிறது.இதனை குருவாகிய தோழி தியானத்தால் எட்டினாள் என்பதை அடியார்கள் உணர்ந்து, அதுவே சிவத்தியானம் ...
More...More...More...More...