குறுநகையில் ஒளிகொளுத்தும் கடவூர்க்காரி குறுகுறுத்த பார்வையிலே கவிதை கோடி நறும்புகையில் குங்கிலியக் கலயன் போற்றும் நாதனவன் நாசியிலே மணமாய் நிற்பாள் குறும்புக்குக் குறையில்லை;…

சந்தனக் காப்பினில் குங்கும வார்ப்பென சக்தி திகழுகின்றாள் – எங்கள் சக்தி திகழுகின்றாள் வந்தனை செய்பவர் வாழ்வினில் பைரவி வெற்றி அருளுகின்றாள் – புது வெற்றி அருளுகின்றாள் அன்புக் கனலினைக் கண்ணில் சுமந்தவள் ஆற்றல்…

                வாழ்வினில் ஆசை வைப்பவர்க்கெல்லாம் வரமாய் வருபவள் நீ தாழ்வுகள் மாற்றி தவிசினில் ஏற்றி தாங்கும் கருணையும் நீ ஊழ்வினை எழுத்தை உடனே மாற்றும்…

கண்கள் நிலவின் தாய்மடியாம் கரங்களில் சுரங்கள் கனிந்திடுமாம் பண்கள் பெருகும் யாழ்மீட்டி பாரதி சந்நிதி துலங்கிடுமாம் எண்கள் எழுத்தின் வர்க்கங்கள் எல்லாம் எல்லாம் அவளேயாம் புண்ணியள் எங்கள் கலைமகளின் பூம்பதம் போற்றிப் பாடிடுவோம்! ஏடுகள்…

மயில்சாயல் கொண்டவளா மங்கை – அந்த மயிலுக்கு சாயல்தந்த அன்னை கயலுக்கு சாயல்தரும் கண்ணால் -இந்த ககனத்தைத் தான்படைத்தாள் முன்னை புயல்சாயல் கொண்டதவள் வேகம்-அந்தப் பொன்வண்ணன் விழிபடரும் மோகம் முயல்கின்ற தவத்தோடே ஒளிர்வாள் –…

குளிரக் குளிர குங்குமம் கொட்டி மலர மலர மாலைகள் கட்டி ஒளிர ஒளிர தீபம் ஏற்றினோம்- தளரத் தளர பொங்கலும் வைத்து தழையத் தழையப் பட்டையும் கட்டி தகிட தகிட தாளம் தட்டினோம் குழையக்குழைய…

சிறகுலர்த்தும் ஒருபறவை அலகு – அதன் சிற்றலகின் நெல்லில் அதன் உலகு திறந்திருக்கும் வான்வழியே பயணம்- பின் தருவொன்றில் தன்கூட்டில் சயனம் மறப்பதில்லை தன்னுடைய பாதை-அது மொழிபேசத் தெரியாத மேதை அறிவுக்கும் அறியாத யுக்தி-அதை…

வீணைநாதம் கேட்குதம்மா வெட்ட வெளியிலே வெள்ளிச் சலங்கை குலுங்குதம்மா வானவெளியிலே காணக் காண லஹரியம்மா உனது சந்நிதி காதில்சேதி சொல்லுதம்மா கொஞ்சும் பைங்கிளி ஆரவாரம் செய்யத்தானே அழகுராத்திரி அன்னைமுன்னே ஒன்பதுநாள் ஆடும்ராத்திரி பாரமெல்லாம் தீரத்தானே…

பூடகப் புன்னகை என்னமொழி- அவள் பூரண அருளுக்கு என்ன வழி? ஆடகத் தாமரைப் பதங்களிலே- சுகம் ஆயிரம் உண்டென்று சொல்லும் கிளி வேடங்கள் தரிப்பதில் என்னபயன் – இனி வேட்கைகள் வளர்ப்பதில் நீளும்பழி நாடகம்…

எளிதில் காணலாம் அவளை… ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள். அந்தப் பெரிய மனிருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம். கடைகள் இருக்கலாம். அவர் தன்…