“சோர்வு” என்பது பெரிய விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால்போதும். “தீர்வு” பிறந்துவிடும். “மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள்…

இலாப, நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், மனதை அப்படியெல்லாம் துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன? மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள். உற்சாகக் கணத்தில் சில…

உங்கள் குழந்தை, பேப்பரில் எதையோ ஆர்வமாக வரைந்து கொண்டிருக்கிறது. சில விநாடிகள் உங்களையும் மறந்து ரசிக்கிறீர்கள். உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “சரி, சரி! வரைஞ்சது போதும்! பரிட்சை வருது! படிக்கற வழியைப் பாரு”…

சில சாதனைகளைப் பார்க்கிறபோது எல்லாம் வெகுசீக்கிரமாக நடப்பதுபோல் தெரிகிறது. குறி பார்த்து அம்பை விடுகிற மனிதன், அனாயசமாகச் செய்துமுடிப்பதுபோல் படுகிறது. ஆனால், அந்த அரை நிமிட அரங்கேற்றத்தின் பின்னணியில் ஆறு வருட அவஸ்தையும் அயராத…

நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நேரத்தில், எதையும் செய்யாமல் “சிறிது நேரம் சும்மா இருக்கலாம்” என்று தோன்றும். அதுபோன்ற நேரங்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி…

“மனுஷன்னா பலவீனம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லிக்கொண்டே வேண்டாதவற்றை விடாப்பிடியாகப் பற்றியிருப்பவர்கள் சிலருண்டு. “அது” என்றால் போதைப் பழக்கமாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. அரட்டையில் ஆர்வம், அனாவசியப் பதட்டம் என்பது போன்ற பலவீனங்களில் தொடங்கி, புகை,…

நம்பிக்கையூட்டும் விஷயங்களை விடுத்து, ‘ஜாதகம்’ என்ற மூடநம்பிக்கைக்குள் பாதை செல்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஜாதகத்தை வைத்து ஒருவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி, வெற்றி தோல்விகளை கணித்துவிடமுடியும் என்று சோதிடம் கூறுகிறது. 9 கிரகங்களின் நிலையை வைத்தே…

கமர்கட்டுக்கும், லாலி பாப்பிற்கும் ஆசைப்படும் குழந்தைகளே இப்பொழுது கம்ப்யூட்டருக்கும், ஒலிம்பிக்ஸிற்கும் ஆசைப்படுகிறார்கள். தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே அவர்களுக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கிறது. தகுதிகளை, படிப்பு, அனுபவம், பொது அறிவு எனப் பல பிரிவுகளில்…

ஒருவருடைய பலம்தான் அவருடைய சாதனைகளுக்கு முழுமையான காரணமாக இருந்தது என்று கூறமுடியாது. பலவீனமும் பல சாதனைகளுக்குக் காரணமாக அமையும். எப்படி என்றால், அவர்கள் தங்களின் பலவீனங்களிலிருந்து கற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்களிலிருந்து பல உண்மைகளைப் புரிந்துகொள்கிறார்கள்.…

நில நடுக்கம் நேரும்போதெல்லாம் வெட்டவெளிக்கு வந்துவிடுமாறு நிலவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். பூமி பிளந்து இறந்தவர்களைவிடவும் வீடு இடிந்து முடிந்தவர்களே அதிகம். அடைந்து கிடக்கும் வீட்டைத் துறந்து, விரிந்து பரந்த வெட்டவெளிக்கு வரும்போது வாழ்க்கை பாதுகாப்பாகிறது.…