எட்டயபுரமும் ஓஷோபுரமும் பாரதி, கண்ணனைப் பற்றிய தன் பாடல்களுக்கு வைத்த தலைப்பு, “கண்ணன் பாட்டு”. “கண்ணன் பாட்டு” என்கிற தலைப்பு, எவ்வித அதிர்ச்சி மதிப்பையும் ஏற்படுத்தவில்லை நமக்கு. கண்ணன் என்கிற கடவுளைப் பற்றிய துதிப்…

எட்டயபுரமும் ஓஷோபுரமும் ‘கண்ணன்’ என்னும் பெயருக்குப் பொதுத்தன்மை ஏற்பட்டுப் பல காலங்கள் ஆகிவிட்டன. கடவுளின் பெயர் மட்டுமல்ல அது. காதலர்கள் ஒருவரையருவர் அழைத்துக் கொள்கிற பெயர், குழந்தையைக் கூப்பிடுகிற பெயர், நண்பனை விளையாட்டாக அழைக்கிற…

என்றோ ஒரு நாள்… காற்றில் மிதக்கிற பஞ்சுப் பொதியாய் ஆகிற இதயம் அற்புதம் நிகழ்த்தும். போர்களைத் தடுக்குமென் பாடல்கள் அனைத்தும் பூமி முழுவதும் பூக்களை மலர்த்தும். வார்த்தைகள் கடந்த வெளியினை நோக்கிக் காலம் எனது…

பசியா? தூக்கமா? சரியாயெதுவும் புரியாதிருக்கிற குழந்தையின் அழுகையாய் மற்ற குயில்கள் மயங்கித் துயில்க¬யில் ஒற்றைக் குயிலின் கீதக் கதறலாய் சூரியக் கதிர்கள் சுட்டதில் கரைந்து புல்லின் வேர்வரை போகிற பனியாய் மழையின் தீண்டலில் மணக்கிற…

கவிஞர் இளந்தேவன் தன் 71ஆவது வயதில் காலமானார் என்னும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.கவியரங்குகளைக் கட்டியாண்ட களிறனைய கவிஞர் அவர். இயற்பெயர் முத்துராமலிங்கம்.கணித ஆசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். எம்ஜி.ஆர்.பற்றி அவர் எழுதிய கவிதைகளைக் கண்டு மகிழ்ந்த அப்போதைய…

    அகமனதுக்குள் ஆழப்புதைந்த விதையிடமிருந்து வெளிவரும் துளிர்களாய் நடந்து கொண்டிருக்கும் நாடகக் காட்சியில் புரிந்தும் புரியாதிருக்கும் புதிர்களாய் திரைகள் விலகிய தரிசனத் தெளிவில் தெறித்துக் கிளம்பிய ஞானப் பரல்களாய் பிரபஞ்ச ரகசியம் தேடிக்…

  எனது கவிதைகள்! கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில் நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய் குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள் அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய், அலைகள் தினமும் அறைந்து போனதில் கரைந்து கிடக்கிற கடற்கரை…

  எனது கவிதைகள் நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய் வேற்றுமுகமின்றி… எதிர்ப்படும் எவரையும் பற்றிக் கொள்கிற பிஞ்சுவிரல்களாய் உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம் உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய் பரிவு வறண்ட பாலைவனத்திடைப்…

  இதற்கு முன்னால் நான் இறைவனாயிருந்தேன். படைத்துக் குவிப்பதும், பராமரிப்பதும் துடைத்து முடிப்பதும் தொழில்களாயிருந்தன. நதிகள், கடல்கள், நிறையத் துப்பினேன். மண், கல் பிசைந்து மலைகள் படைத்தேன், புலர்வதும் மறைவதும் பொழுதுகளென்பதும், மலர்வதும் உதிர்வதும்…

  எத்தனை இரவுகள் விடிந்தாலென்ன? எனது கனவுகள் கலைவதாயில்லை. இடைவெளியின்றி இந்த நீளத்தில் எவருக்கும் கனவுகள் வந்திருக்காது. பூமியில் முதன்முதல் புலர்ந்த விடியலைக் கண்கொண்டு பார்த்ததாய்த் தொடங்கிய கனவு யுகங்கள் கடந்த பின்வழிப் பயணமாய்…