புலரிபோல் வெளிச்சம் பொய்யாத் தோன்றிய பின்னிராப் போழ்தினில் பெய்தது பேய் மழை. கரிய முகிலின் கனவுகள் கலைந்து தரையில் விழுந்தன தண்ணீர்த் தாரைகள். உறக்கத்திலிருந்து உசுப்பப்பட்ட தாவரங்கள் தலைக்குக் குளித்தன. பறவைக் கூட்டில்…

  போர்க் களத்திற்குப் போகும்போது கத்தியைப் போலவே கவசமும் முக்கியம். ஒருதுளி கூட இரக்கமில்லாமல் உயிர்கள் குடிக்கும் கத்தியை விடவும், காயம் செய்யும் கொள்கையில்லாமல் குத்துகள் தடுக்கும் கவசமாயிருக்கலாம். மொத்த விலைக்கு உயிர்களை வாங்கும்…

வடு

July 3, 2017 0

    இழந்த உறவின் ஏக்கத் தழும்புகள் இதயத்துக்குள் இல்லாமலில்லை. எதிர்பாராத நொடிகளில் திடீரென எழுகிற வலியை எழுதுவதெப்படி? வருடிக் கொடுக்கிற விசிறிக் காற்று வந்து கொண்டே இருக்கிற போதும் வீசிப்போன தென்றலின் நினைவு…

  சத்சங்கத்தின் சரண தியானத்துடன் புத்த பூர்ணிமா பொழுதின் துவக்கம். மூடிய இமைகள் மெதுவாய்த் திறந்ததும் வானக் கவிதையாய் வண்ண வெண்ணிலவு கிழக்கிலிருந்து கிளர்கிற ஞானமாய் தகதகக்கின்ற தங்க அற்புதம்; பூஜ்ய வடிவம், பூரண…

  ஆகாயத்தின் அடுத்த பக்கம் என்ன நிறமாய் இருக்கக் கூடும்? வானம் பார்க்க வாய்க்கும் போதெலாம் பௌர்ணமிக் கடலாய்ப் பொங்குமிக் கேள்வி. சூரிய முதுகு சுட்டுச் சுட்டுக் காய்ந்த பழம்போல் கறுத்துக் கிடக்குமா? வெள்ளை…

  வெற்று வானத்தில் வண்ணம் குழைக்கும் நெற்றித் திலகமாய் நிலவின் சித்திரம். பௌர்ணமிப் பொழுதில் பார்வையைக் குவித்து நிலவுடன் மனிதன் நின்றிடலாகுமா? வெண்ணிலா என்பது விண்ணையும் சேர்த்துதான். கண்கள் சிமிட்டும் நட்சத்திரங்களைக் கணக்கில் கொள்ளாத…

    ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது. “ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும் பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று. வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு வேறுதிசையில் விரையலாயிற்று. மேஸ்திரி…

  ஒரு நேர்க்கோடு வரையத்தான் நீண்ட காலமாய் முயல்கிறேன். வேண்டாத இடங்களில் அது வளைந்து கொள்கிறது. நான் சேமித்து வைத்திருக்கும் பதில்களின் பின்னால் நின்று கொண்டு அவற்றைக் கேள்விகளாக்கி விடுகிறது. சாதாரண சம்பவங்களில்கூட ஆச்சரியக்…

  எந்த வீட்டுக் குழந்தையென்றாலும் கன்னம் தடவிக் கொஞ்சியிருப்பேன் பளிங்குக் கண்கள் பளிச்சிட வேண்டிக் குரங்குச் சேட்டைகள் காட்டியிருப்பேன். அன்று மாலையும் அப்படியேதான்! புடவைக் கடையில் பொம்மையைப் பார்த்து விழிகள் மலர்த்திய வெள்ளரிப்பிஞ்சை பேனா…

  தென்றலில்லாத இன்றைய புழுக்கத்தை மௌனமாய் ஏற்பதன்றி வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள். சூரியனுக்குத்தான் தெரியும்… நிலாக்கால வெளிச்சத்தையும் நட்சத்திரக் கண் சிமிட்டலையும் பார்க்கக் கிடைக்காத வருத்தம். இன்னும் கொஞ்சநேரம் பாடிக் கொண்டிருக்குமாறு சொல்லியனுப்ப…