சிறு சிறு டீஸ்பூன் அளவுகளிலேயே பருக வேண்டியதாய்ப் போனது வாழ்க்கை கரைதொடும் பிரவாகம் கண்களில் பட்டால் மிரண்டுபோகிற மனத்துடன் மனிதர்கள். கைகூப்பல்களில் தொடங்கும் அறிமுகம் தோள்தொடும் நட்பாய்த் தொடருவது அபூர்வம். தொலைதூரம் வரை…

ஒவ்வொரு நாளும் உன்னிடம் சொல்ல ஏதேனும் தகவல்கள் என்னிடமிருக்கும். வைகறைப் பூக்களின் வெண்பளித் துளிகளாய்ச் சில்லிடும் தகவல்கள் சேகரித்திருப்பேன். மலர்களைப் பற்றி, குழந்தைகள் பற்றி, கனவுகள் பற்றி, கவிதைகள் பற்றி, தலையணைக்குப் பஞ்சு தேடும்…

  “சர் சர் சர்” என உச்சந் தலையில் சவரக் கத்தியின் சடுகுடு ஆட்டம்; காய்ச்சல் காலத்து நேர்த்திக் கடன்தான் முடியிறக்கத்தின் மூல காரணம்; கொத்துக் கொத்தாய் மடியில் விழுந்த கற்றை மயிர்களைக் கைகளில்…

உடைந்து போன உன் கனவுகளெல்லாம் சில்லுகளாக சிதறிக் கிடக்கும் தகவல் தெரிந்துதான் வந்திருக்கிறேன். ரணமாய் உறுத்தும் ரகசிய வலிகளைக் காட்டிவிடுகிற கண்கள் உனக்கு. பத்திய உணவு பிடிக்காத குழந்தையாய் அழுகையை அழுத்தும் உதடுகள் மீது…

சாயங்கால வெய்யிலாய் உன் முகம் தூங்கச் செல்லும் சூரியன்போல. அஸ்தமன நேரத்து அலுப்பிலும்கூட இதமான வெளிச்சம் இருக்கவே செய்யும். எனினும்… அடடா ஏதுனக்கு ஓய்வு? இன்னொரு பயணம் தொடங்கி விட்டாய் நீ. இன்னோ ருலகின்…

ஒன்று தொடங்கிப் பன்னிரண்டு வரையென் எண்ணங்களையே எண்களாக்கினேன். வட்டம் ஒன்றினுள் வரிசையாய்ப் பொருத்தினேன். ராகு காலங்களை ரத்து செய்து நல்ல நேரங்களை நிலை நிறுத்தினேன். கூரிய முனையில் பூக்கள் மலர்த்திய பார்வையின் கனிவை முட்களாக்கினேன்.…

எழுதப் படாத என் கவிதையை ரசித்து தூரத்து மரங்கள் தலையசைத்தன. தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக் கட்டுப்படுகிற குழந்தைகள் போல ஒரே சீராகக் கிளைகள் அசைந்தன. பசிய மரங்களின் பேச்சுக் குரலாய் சலசலத்தன தளிர்களும் இலைகளும்.…

  அருவிகள் நடந்த வழித்டமிருக்கும் மலையின் மீது தழும்புகள் போல. கரும்பாறைகளின் கசிவின் தடயங்கள் இராணுவ வீரனின் கண்ணீர்போல. மெல்லிய கீற்றாய்ப் பறவையின் பாடல் நேற்றைய கனவின் நிழலைப் போல. மௌனப் பூக்கள் மலர்கிற…

  பிரிவு நேர்வதை உறுதி செய்கிற விருந்து நமக்கும் ஒருநாள் நிகழலாம். சிற்றுண்டித் தட்டை ஸ்பூனால் கிளறி வெற்றுப் பார்வையில் விநாடிகள் போகலாம். மௌனப் பாறைகள் மனதில் சுமந்து கண்ணீர் மறைத்துக் கதைகள் பேசலாம்.…